பாடல்
ரா: தனிமையிலே....
தனிமையிலே... தனிமையிலே
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா...
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா...
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா
மன துயரமெல்லாம் தனிமையிலே மறைந்திடுமா
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா
உயிர் வாழும் வரை நெஞ்சம் மறந்திடுமா
தனிமையிலே...
தனிமையிலே இனிமை காண முடியுமா...
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை...
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமையில்லை
தனிமையிலே...
தனிமையிலே இனிமை காண முடியுமா
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா
.