பாடல்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்....
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழ விடாதவர் வந்து
நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
நம்மை வாழ விடாதவர் வந்து
நம் வாசலில் வணங்கிட வைத்து விடும்
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்....
அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
அள்ளி கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்
ஆனந்த பூந்தோப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை
இது நான்கு மறை தீர்ப்பு
வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை
இது நான்கு மறை தீர்ப்பு
என்றும் தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்....
.