Follow on


Old Thamizh film songs

aandavan oruvan irukindraan

Singer: Seergazhi Govindarajan
Music: TR.Papa
Lyrics: MK.Athamanathan
Film: Nallavan Vazhvan (1961)

பாடல்

கோ: ஆண்டவன் ஒருவன்... இருக்கின்றான்....
அவன்... அன்பு மனங்களில்... சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய் சுடராய்
வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய் சுடராய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்
விளக்கிட முடியாத தத்துவ பொருளாய்

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

நல்லவர் போல் வெளிவேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நல்லவர் போல் வெளிவேஷங்கள் அணிந்து
நடிப்பவர் நடுவில் இருப்பதில்லை
நாணயத்தோடு நல்லறம் காத்து
நடப்பவர் தம்மை மறப்பதில்லை

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
தன்மானம் காப்பதிலே
அன்னை தந்தையை பணிவதிலே
பிறந்த பொன் நாட்டின் நல்ல முன்னேற்றம்
காண பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே..ஆஅஆஅஆ
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்க்கத்திலே

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
.