Follow on


Old Thamizh film songs

then unnum vandu

Singers: AM.Rajah, P.Susheela (Sivaji, Savithri)
Music:  T.Chalapathi Rao
Lyrics: KP.Kamakshi
Film: Amara Deepam (1956)


பாடல்

சு: தேன்  உண்ணும் வண்டு மாமலரை கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ஓ பூங்கொடியே நீ சொல்லுவாய்....

ரா: வீணை இன்ப நாதம் எழுந்திடும் வினோதம்
விரலாடும் விதம் போலவே
காற்றினிலே தென்றல் காற்றினிலே
காற்றினிலே சலசலக்கும் பூங்கொடியே கேளாய்
புதுமை இதில்தான் என்னவோ
ஓ ஓ ஓ ஓ புதுமை இதில்தான் என்னவோ

மீன் நிலவும் வானில் வெண்மதியை கண்டு
ஏன் அலைகள் ஆடுவதும் ஆனந்தம் கொண்டு
மென் காற்றே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ஓ மென் காற்றே நீ சொல்லுவாய்

சு: கான மயில் நின்று வான் முகிலை கண்டு
களித்தாடும் விதம் போலவே
கலை இதுவே வாழ்வின் கலை இதுவே
கலை இதுவே கலகலெனும் மெல்லிய பூங்காற்றே
காணாததும் ஏன் வாழ்விலே
ஓ ஓ ஓ ஓ காணாததும் ஏன் வாழ்விலே

ரா, சு: கண்ணோடு கண்கள் பேசிய பின்னாலே
காதலின்பம் அறியாமல் வாழ்வதும் ஏனோ
கலைமதியே நீ சொல்லுவாய்
சு: ஓ ஓ ஓ ஓ...
ரா, சு: கலைமதியே நீ சொல்லுவாய்
ஓ ஓ ஓ ...ஒ ஓஒ..ஓ ஓ ஓ ...
.