Follow on

Old Thamizh film songs
 
Aani muthu vaangi vandhen
Singers:  P.Susheela, Soolamangalam Rajalakshmi, L.R.Eswari
Music: M.S.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Bama Vijayam (1967)
(Sowcar Janaki, Kanchana, Jayanthi)

பாடல் (Lyrics)

சு: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவனி வீதியிலே

ஈ: அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே....

சு: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவனி வீதியிலே

ஈ: அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே....

சுரா:  நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரமில்லையடியோ...அடியோ....

சு, ஈ, சுரா: ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவனி வீதியிலே
அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே....

சு:  எண்ணி வைத்தேன்
ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை

ஈ:  ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை

சு:  எண்ணி வைத்தேன்
ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை

ஈ:  ஏறிட்டு நான் அதை பார்க்கவில்லை
மார்பிலும் நான் அள்ளி சூடவில்லை

அந்த கன்னத்தில் என்னடி முத்து வண்ணம்
எந்த கள்ளதனத்தில் வந்ததடி

சு:  வாங்கி கொடுத்ததும் தாங்கி பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து சிந்துதடி

ஒரு முத்து, இரு முத்து, மும்முத்து, நால்முத்து, அம்மம்மா

சுரா: பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி

ஆனி முத்து வாங்கி வந்தேன் ஆவனி வீதியிலே
அள்ளி வைத்து பார்த்திருந்தேன் அழகு கைகளிலே....

சு: ஓஒ ஓஒ ஓஒ ஓ ஒ
ஈ: ஓஒ ஓஒ ஓஒ ஓ ஒ
சு: ஓஒ ஓஒ ஓஒ ஓ ஒ
ஈ: ஓஒ ஓஒ ஓஒ ஓ ஒ
சுரா: ஆ அஆஅ......

சுரா:  மாமன் மக்கள் தேடிய செல்வங்கள் யாருக்கடி
சு: ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி

ஈ: கையில் உள்ளதை கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
கையில் உள்ளதை கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி

சு: வீட்டின் நலத்துக்கும் நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
வீட்டின் நலத்துக்கும் நாட்டின் நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி

ஈ: வீட்டுக்கு
சு: பிள்ளைக்கு
சுரா: ஊருக்கு
சு: நாட்டுக்கு
சு, ஈ, சுரா: பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி

சு, ஈ, சுரா: ஓஒ ஓஒ ஓஒ ஓ ஒ
ஓஒ ஓஒ ஓஒ ஓ ஒ
 ஆ அஆஅ......
ம்ம்ம்ம்ம்......