பாடல்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்து விடாமல்
கொடுத்து விட்டேன் உந்தன் கண்களிலே
கண்களிலே...கண்களிலே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
மனமெனும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இருகரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தவழ்ந்து வந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
ஆஹஹஹாஹ....
.