kadavul oru naalP Susheela, chorus |
பாடல் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் (chorus) ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் (லல லல லா..) கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்தது எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது இறைவனுக்கே இது புரியவில்லை மனிதனின் கொள்கை தெரியவில்லை ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான் ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான் படைத்தவனோ உடனே சிரித்து விட்டான் (லல லல லா..) கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் பள்ளி கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம் பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டானாம் உள்ளம் எங்கும் செல்வம் பொங்கும் அன்பை தந்தானாம் உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம் கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம் கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம் (லல லல லா..) |