Follow on

Old Thamizh film songs

Thiruchendoorin kadalorathil Senthilnaathan

Singers: T.M.Soundararajan, Seerkazhi Govindarajan
Music: Kunnakudi Vaidyanathan
Lyrics: Kannadasan
Film: Dheivam (1972)

பாடல்
சௌ, கோ:
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்...
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்.......

கோ:
அசுரரை வென்ற இடம்
சௌ:
அது தேவரை காத்த இடம்
கோ:
ஆவணி மாசியிலும்
சௌ:
வரும் ஐப்பசி திங்களிலும்
கோ, சௌ:
அன்பர் திரு நாள் காணும் இடம்
அன்பர் திரு நாள் காணும் இடம்

கோ, சௌ:
அசுரரை வென்ற இடம்
அது தேவரை காத்த இடம்
ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திரு நாள் காணும் இடம்
அன்பர் திரு நாள் காணும் இடம்..

திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்......

கோ:
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா....
சௌ:
குழந்தைகள் பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரன் அவன் கலையா

கோ, சௌ:
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா
குழந்தைகள் பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரன் அவன் கலையா

திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்......

கோ:
மங்கையரின் குங்குமத்தை
காக்கும் முகம் ஒன்று
சௌ:
வாடுகின்ற ஏழைகளை
காணும் முகம் ஒன்று
கோ:
சஞ்சலத்தில் வந்தவரை
தாங்கும் முகம் ஒன்று
சௌ:
ஜாதி மத பேதம் இன்றி
பார்க்கும் முகம் ஒன்று
கோ:
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும்
வண்ண முகம் ஒன்று
சௌ:
 நூறு முகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இங்கு

கோ, சௌ:
மங்கையரின் குங்குமத்தை
காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளை
காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை
தாங்கும் முகம் ஒன்று
ஜாதி மத பேதம் இன்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும்
வண்ண முகம் ஒன்று
 நூறு முகம் காட்டுதம்மா
ஆறுமுகம் இங்கு
ஆறூமுகம் இங்கு....

திருசெந்தூரின் கடலோரத்தில்
செந்தில் நாதன் அரசாங்கம்
தேடி தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்......

கோ:
பொன்னழகு மின்னி வரும்
வண்ண மயில் கந்தா
சௌ:
கண் மலரில் தன் அருளை
காட்டி வரும் கந்தா
கோ, சௌ:
பொன்னழகு மின்னி வரும்
வண்ண மயில் கந்தா
கண் மலரில் தன் அருளை
காட்டி வரும் கந்தா

கோ:
நம்பியவர் வந்தால்
சௌ:
நெஞ்சுருகி நின்றால்
கோ:
கந்தா
சௌ:
முருகா
கோ, சௌ:
நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால்
கந்தா, முருகா
வருவாய் அருள் தருவாய்
முருகா...


.